கயிலாயமலையின் பழைய பெயர்
ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப்பரணி என்னும் நூலில் கயிலாயமலைக்குப் பள்ளி என்னும் பெயர் இரண்டுதடவை வழங்குகின்றது.
“பள்ளிக்குன்றும் விற்குன்று மொழிய” (தக்கயாகப்பரணி. 536). என்று பாடுகிறது அங்கே.
சென்னைப் பல்கலைத் தமிழகராதி அதற்குக் கைலாச பருவதம் என்றே பொருள்சொல்கிறது:
பள்ளிக்குன்று: . Mt. Kailās; கைலாச பருவதம். பள்ளிக்குன்றும் விற்குன்று மொழிய (தக்கயாகப். 536).
பள்ளிவெற்பு : பள்ளிக்குன்று. பள்ளிவெற்பின் மாறுகோள் பெறாது (தக்கயாகப். 371).
இந்தச் சொல்லுக்கும் கயிலாயத்திற்கும் என்ன தோதென்று திகைக்கிறது. நாம் பள்ளி என்ற சொல்லின் இக்காலப்பொருள்களைக் கொண்டு ஏதாவது சிவனின் இருப்பிடம் என்று சொல்லலாம். ஆனால் அது வெறும் பாமரமானமுயற்சியேயாகும். அதன் தோற்றம் புதைந்துபோய்விட்டது.
இது தமிழர்கள் (பழந்திராவிடர்களாக) மிகப்பழங்காலந்தொட்டுக் கயிலாயம்போன்ற மலைகளுக்குத் தொடர்புள்ளவகையில் வாழ்ந்து அதற்கான பழஞ்சொல்லைப் போற்றியுள்ளதைக் காட்டுகிறது.
மேலும் குன்று என்பது சிறிய மலையைக் குறிக்கும் என்பதும் இதில் பொய்படுகிறது. குன்று என்றால் வெறும் மலை என்பதே பொருள் என்றும் அறிகிறோம்.