[சிறகு என்ற தவணையத்திலே நான் “செய்யுள்களை எளிதில் புரிந்துகொள்வது எப்படி?” என்ற தொடர்கட்டுரை எழுதுகிறேன்.]
செய்யுள்களை நேரடியாகப் புரிந்துகொள்ளச் சில சீரான நெறிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று அன்றாடம் பழகிய சொற்கள்போல் ஒலித்தாலும் பல சொற்கள் எதிர்பாராத பொருள்களிலும் வழங்குவதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது.
இந்தக் கட்டுரையில் திருக்குறளில் கண் என்ற ஒலிகொண்ட சொற்களின் பொருள்வேறுபாடுகளை வகுத்தும் தொகுத்தும் விளக்குகிறது.